Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
HIGHLIGHTS
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் மார்ச் 1 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 5ல் பூவோடு வைத்தல் நடைபெற்றது. மார்ச் 9ல் காலை 9 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுதல், மாலை 6 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம், மார்ச் 10ல் கம்பம் காவேரி ஆற்றில் விடுதல், மார்ச் 12ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.
தினமும் கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அம்மன் தாட்சாயணி தேவி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.