புதிய நேர கட்டுப்பாட்டால் காஞ்சியில் மதுபானம் வாங்க ஆளில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கட்டுபாடுகளுடனா ஊரடங்கு விதிமுறைகளால் டாஸ்மாக் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இன்று அமல்படுத்தபட்டது காலை 6மணி முதல் 12 மணி வரை டாஸ்மாக் இயங்கும் , பேருந்துகளில் 50 சதவீத பயணம் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
நாள்தோறும் அதிக பரவல் காரணமாக பொதுமக்கள் பேருந்து பயணத்தை தவிர்க்கின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது பேருந்தில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பயணிகள் மட்டுமே சென்று வருகின்றனர்
இதேபோல் ரயில் நிலையங்களில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து ரயில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
புதிய நேரே கட்டுப்பாடுகளுடன் காலை 8 மணி முதல் 12 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்த நிலையில் கடைகள் திறக்கப்பட்டு சில எண்ணிக்கை நபர்களே மதுபானம் வாங்க வந்தனர்,
அந்த மதுபானம் வாங்க வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு வரும் சமூக வெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது பல மதுபான கடைகளில் மது பானங்கள் வாங்க ஆள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறத