வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட குடோனுக்கு சீல்
Fire Accident -வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
Fire Accident -காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வந்த பாரத் கேஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 12 பேர் பலத்த தீ காயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்போது வரை மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ள நிலையில் நேற்று காவல்துறை தடைய அறிவியல் துறை துணை இயக்குனர் செந்தில்குமரன் மற்றும் பாரத் கேஸ் விற்பனை மற்றும் வணிக நிறுவன அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் நிஷா பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் லோகநாதன் வெடி விபத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின் மாலை சிலிண்டர்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது.இதன் பின் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையான குழுவினர் குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2