/* */

‘‘தேர்தல் விதிகளை மதியுங்கள்’’ அதிமுக நபரை வெளியேற்றிய ஆட்சியர்

தேர்தல் அலுவலர் உடனடியாக வேட்பாளரிடம் கூடுதலான நபரை அனுமதிக்க இயலாது என கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

‘‘தேர்தல் விதிகளை மதியுங்கள்’’ அதிமுக நபரை வெளியேற்றிய ஆட்சியர்
X

கூடுதலான நபரை அனுமதிக்க இயலாது எனக் கூறும் ஆட்சியர்.

நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தொடங்கியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மூன்று தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி பணிபுரிவார் எனவும், வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலக அறைக்குள் வந்தபோது கூடுதலாக ஒரு நபர் வந்ததை அறிந்த தேர்தல் அலுவலர் உடனடியாக வேட்பாளரிடம் கூடுதலான நபரை அனுமதிக்க இயலாது என கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின் வேட்பாளரின் உடன் வந்த மாவட்ட செயலாளர் கூடுதல் நபரை வெளியே நிற்குமாறு கூறிய பின் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் கேமராக்கள் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதும் , எந்த ஒரு நடத்தை விதி மீறல்களும் காஞ்சிபுரத்தில் இருக்காது என ஏற்கனவே தேர்தல் அலுவலர் அறிவிக்க நிலையில் இன்று நடைபெற்ற சம்பவமும் அதை உறுதி செய்தது.

Updated On: 25 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி