காஞ்சிபுரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ஊட்டச்சத்து முகாம்
6 வயத்திற்குபட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம் பரிசோதனை முகாம் நாள்தோறும் ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் முகாம் மாவட்டத்திலுள்ள பல மையங்களில் நடைபெறுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது. மாகரல் கிராம ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் துவக்கி வைத்து குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை கணக்கில் செய்வதை ஆய்வு செய்தார். இம்முகாமில் குழந்தைகளின் சராசரி உயரத்திற்கு ஏற்ப அவர்களின் எடை இருப்பதை உறுதி செய்தல், இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை, ஊட்டச்சத்து வழங்கி ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதில் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் சத்துமாவு, கடலைமிட்டாய் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கினார். பின்னர், அப்பகுதியில் செயல்பட்ட வரும் அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் ருசிபார்த்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், கவுன்சிலர் பரசுராமன் , ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா ஞானவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், குழந்தைகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.