கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் அடுத்த பேரணக்காவூரில் கல்குவாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் பேரணக்காவூரில் கல்குவாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் கல்குவாரிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் பழையசீவரம் , மதூர் , மாகறல் உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் அல்லது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கும் கட்டுமான பொருள்களுக்கு தேவையான எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
இதில் குறிப்பாக சென்னை புறநகருக்கு மிக ஒட்டிய பகுதிகளான மதுர் பேரணக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தில் ஏற்கனவே ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்குவாரியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்து இடையூறு இருந்து வருகிறது.இந்த நிலையில் மேலும் ஒரு கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
எனவே பேரணக்காவூரில் பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேலும் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும். ஓருபோதும் அனுமதியளிக்க கூடாது எனவும் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
கல் குவாரிகளிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வதால் மாநில சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமாக சேதம் அடைந்து போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதும், சாலைகள் சேதமடைந்து உள்ள நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி வாகனத்தின் மீது விழுவது மற்றும் கனலாக லாரிகள் வேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதாக மாவட்டம் குற்றச்சாட்டு உள்ளது.