அண்ணாவின் இல்லத்தை காண அதிகாலை வந்த நரிக்குறவர் குடும்பத்தினர்
அண்ணாவின் நினைவு நாளையொட்டி நரிக்குறவர் குடும்பத்தினர் சென்னையிலிருந்து அதிகாலை 6 மணிக்கு அண்ணா இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்
HIGHLIGHTS
தமிழகத்தின் மறைந்த முதல்வரும் திமுகவை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர், தொண்டர்கள் என பலர் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் ஆற்காடு அடுத்த கண்ணமங்கலத்தில் பூர்வீகமாக கொண்டு சென்னையில் சில்லறை பாத்திர வியாபார தொழில் செய்து வரும் நரிக்குறவர் ரமேஷ் என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் மைத்துனர் உடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் அதிகாலை 6 மணி அளவில் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வந்தார்.
அவரது திருவுருவ சிலைக்கு குடும்பத்துடன் மரியாதை செலுத்தி, நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படம் , சமையலறை , நாற்காலி , அண்ணா பயன்படுத்திய பொருட்களை ஆர்வமுடன் பார்த்து செல்ஃபி எடுத்து கொண்டனர்.
எம்ஜிஆரின் தீவிர கொண்டான் தான் அண்ணாவின் இல்லத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காஞ்சிபுரத்துக்கு தனது குடும்பத்துடன் வந்ததாகவும், தற்போது மகிழ்ச்சியாக உள்ளாதாக தெரிவித்தார்.