/* */

உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

காஞ்சிபுரம் வேலூர் சாலையில் வாகன சோதனையில் பறக்கும் படை ஈடுபட்டிருந்தபோது வாலிபர் இடமிருந்து ரூபாய் 2 லட்சம் ரூபாய் ஆவணங்கள் இல்லை என பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறிமுதல்
X

உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூபாய் 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் கலைவாணியிடம் ஒப்படைத்தபோது.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன் பட்டறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த (Swift) காரை சோதனை செய்த போது இருசக்கர வாகனம் வாங்க உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன்பட்டறை அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கமல் நாதன் என்பவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு லட்ச ரூபாய் இருப்பதை கண்டு பணம் குறித்து விசாரித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது , இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததாக கூறிய நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் இரண்டு லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்ச ரூபாயை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைவாணியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இதுவரை ஐந்து நபர்கள் இடம் இருந்து மட்டுமே மாவட்டம் முழுவதும் பறக்கும் படையின்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2024 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!