/* */

தோட்ட உற்சவத்தில் ரோஜா மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சிவரதர்

காஞ்சி வரதர் ரோஜா மலர் அலங்காரத்தில் கோடாலி முடிச்சு கொண்டையுடன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

HIGHLIGHTS

தோட்ட உற்சவத்தில் ரோஜா மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சிவரதர்
X

ரோஜா மாலைகள் அணிந்து கோடாலி முடிச்சு அலங்காரத்தில் தாத்தாச்சாரியார் தோட்டத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் தேவராஜசுவாமி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தோட்ட உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி தாத்தாச்சாரியார் தோட்டத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு கிராமங்களுக்கு சென்று மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து பெருமாள் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள தாத்தாச்சாரியார் தோட்டத்துக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் ரோஜா மலர்மாலைகள் அணிந்தும்,கோடாலி முடிச்சு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தோட்டத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை அதிகாலையில் பெருமாள் சிக்குத்தாடை அலங்காரத்தில் தோட்டத்திலிருந்து மீண்டும் ஆலயத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Updated On: 18 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்