தோட்ட உற்சவத்தில் ரோஜா மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சிவரதர்
காஞ்சி வரதர் ரோஜா மலர் அலங்காரத்தில் கோடாலி முடிச்சு கொண்டையுடன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தோட்ட உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி தாத்தாச்சாரியார் தோட்டத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு கிராமங்களுக்கு சென்று மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து பெருமாள் தோட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள தாத்தாச்சாரியார் தோட்டத்துக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் ரோஜா மலர்மாலைகள் அணிந்தும்,கோடாலி முடிச்சு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தோட்டத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை அதிகாலையில் பெருமாள் சிக்குத்தாடை அலங்காரத்தில் தோட்டத்திலிருந்து மீண்டும் ஆலயத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.