மயான கொள்ளை நிகழ்வு: காஞ்சிபுரத்தில் கோலாகலம்
மகா சிவராத்திரி மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை நிகழ்வில் ஏராளமானோர் பல்வேறு விதத்தில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
HIGHLIGHTS
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதால், மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று மகாசிவராத்திரி விழா நிறைவு பெற்ற பின் இன்று இந்த மயான கொள்ளை விழா நடைபெற்றது.
அந்த வகையில் காஞ்சிபுரம் கம்மாள தெரு பெரியகஞ்சிபுரம் மார்கெட் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில், 137 வது ஆண்டுடாக மயான கொள்ளை திருவிழாவானது மிக விமர்சியாக நடைபெற்றது.
அங்காளபரமேஸ்வரி 24கைகளை கொண்டு பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்காள பரமேஸ்வரி உற்சவம் கோவிலில் உள்ள புறப்பாடு செய்யப்பட்டு பூக்கடை சத்திரம் வழியாக நான்கு ராஜவீதி வலம் வந்து, அம்மன் பழைய ரயில்வே சாலையில் உள்ள இடுகாட்டில் நிறைவு பெற்றது. வழி எங்கும்வழி எங்கும் பக்தர்களின் நேர்த்திகடன் செலுத்தினர்.
விவசாயம் மற்றும் பூக்கள் வியாபாரம் செழிக்க பூக்கள் மற்றும் காய்கறிகளை சாமி மீது தூக்கி எறியப்பட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் 5 ராட்சஷ கிரேன் மூலம் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடனாக நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து காஞ்சிபுரம் குவிந்தனர்.
சாமி ஊர்வலத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் தீமிதி திருவிழாவும், வழியெங்கிலும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.