Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம்: இறுதிநாளான இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. நேற்றுவரை மாவட்டம் முழுவதும் 550 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று இறுதி நாள் என்பதால் காலை 9 மணி முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்நிலையில் வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காவல்துறையினர் அனுமதிக்கப்படுகின்றனர்.
திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று 10.30 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நல்ல நேரம் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் குவிந்தனர்.