ஆன்லைன் வகுப்புகளால் சிறுவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு, மருத்துவர்கள் எச்சரிக்கை
ஆன்லைன் வகுப்புகளால் சிறுவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுகிறது என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
HIGHLIGHTS
இந்தியா முழுவதும் கடந்த 18 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் பல ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தொழிற்சாலைகளில் ஐம்பது சதவீத பணியாளர்கள் பணி புரிந்தனர். மாவட்ட பாதிப்பு சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த இரு மாதமாக தான் பாதிப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையை குழந்தைகள் கல்லூரி மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது.
குறிப்பாக தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 3 மணி வரை ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வந்தது.
இந்த ஆன்லைன் வகுப்புகளை பயில மாணவ மாணவிகள் செல்போன் லேப்டாப் மற்றும் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் உதவியுடன் பயின்று வந்தனர்.
இந்தப் பயிற்சிகளில் கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து பயின்று வந்ததால் தற்போது சிறுவர் சிறுமிகளுக்கு பார்வை குறைவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடந்த 3 மாதங்களாகவே கண் பாதிப்பால் சிறுவர் சிறுமிகள் அதிக அளவில் பரிசோதனைக்கும் சிகிச்சை மேற்கொள்ளவும் வருவது வருத்தம் அளிப்பதாகவும்,
இதுகுறித்து கேட்டபோது ஆன்லைன் கிளாஸில் படிப்பதும், அதன் தொடர்ச்சியாக செல்போனில் வீடியோ கேம் திரைப்படம் என பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலை நீடிக்கும் நிலையில் கண் பார்வை பாதிப்பு ஏற்படலாம் என்றதாகவும், உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற்று அதன்படி பயிற்சி செய்து செயல்பட்டால் நீண்ட காலம் கண் பார்வை பெற்று வாழலாம் என தெரிவித்தார்.