கொரானாவை குணப்படுத்த சிகிச்சை மையங்கள் ஏற்பாடு
6 இடங்களில் 1780 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தயார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை தருவதவற்காக 6 இடங்களில் 1780 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர் மாதா மருத்துவமனை கல்லூரி, மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரி மையங்களும், பல்லவன் பொறியியல் கல்லூரி விடுதியில் ஒன்றும் மற்றும் ஒரகடம் பகுதியில் அரசு தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியும் சிகிச்சை மையங்களாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து அலுவலரும் அந்தந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.