Begin typing your search above and press return to search.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க 3மாதம் அவகாசம்: காஞ்சி கலெக்டர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு 3 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் பதிப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27 .08 .2021 வரை இணையம் வாயிலாக http://tnvelaivaaippu.gov.in சென்று தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் விடுபட்ட அனைவரும் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.