/* */

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி

குன்றத்தூர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நிலம் விற்பனை செய்வதில் தகராறில் மனைவி கண் முன்னே கணவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி
X

நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் காவல்துறை பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று குற்றவாளிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார். மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும், அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன் சந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசுதரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடி குற்றம் நிருபித்ததை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளங்கோவன் இன்று செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன்,ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேரையும் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!