Begin typing your search above and press return to search.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஆயத்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸார்
மீட்புக் கருவிகள், மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருக்கோவிலுார் போலீசார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆயத்தப் பணியை மேற்கொண்டனர்.
விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை பேரிடரை சமாளிக்கும் வகையில் போலீசார் ஆயத்த நிலையில் இருக்கும் பொருட்டு, திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் இயற்கை சீற்றங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான கருவிகள், மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அதனை கையாளும் வழிவகைகள் குறித்து டி.எஸ்.பி., கங்காதரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.இதில் அனைத்து போலீஸாரும் பங்கேற்றனர்.