/* */

சின்னசேலம் வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வியாபாரிகள் அவதி

சின்னசேலம் வாரச் சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாகி வருவதால் வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சின்னசேலம் வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வியாபாரிகள் அவதி
X

வாரச்சந்தை பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகர பகுதியில் பாண்டியன்குப்பம் செல்லும் சாலை அருகே மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வார சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தையில், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வர். விலை குறைவாக இருக்கும் என்பதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவர். மழை பெய்தால் சந்தை பகுதிகளில் மழைநீர் தேங்கி, வியாபாரம் பாதிப்பது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், சந்தையின் ஒரு புறத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே சந்தையை சீரமைத்து குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் செல்வதைத் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Nov 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...