Begin typing your search above and press return to search.
கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஶ்ரீதர் பாராட்டி கேடயம் வழங்கினார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கும்பூ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்கள் வில்மா முதல் இடமும், இம்ரானா பர்ஹத், நித்திஷ் ,அக்நிஷ்,அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இடமும் மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதில் மாணவர்கள் அகஸ்தியா, தனுஷ், தனிஸ்கா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்று எல்லோ கிரேடு பெற்றனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று பாராட்டி கேடயம் வழங்கி கவுரவித்தார்.