/* */

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது: போலீசார் அதிரடி

திண்டுக்கல்லில் கொலையில் தொடர்புடைய குற்றவாளி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது: போலீசார் அதிரடி
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அல் ஆசிக்.

திண்டுக்கல், குட்டியபட்டி பகுதியில் 20.09.2021 அன்று முகமது இப்ராஹிம் (26) என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, இக்கொலை வழக்கு தொடர்பாக பேகம்பூர் பகுதியை சேர்ந்த லத்தீப் மெளலானா(23), என்பவர் உட்பட 5 பேரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் 5 பேரில் 4 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 5-ம் எதிரியான அல்ஆசிக்(28) என்பவரின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு எஸ்பி.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கலெக்டர் விசாகன், அல் ஆசிக்கை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் அல் ஆசிக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 5 Dec 2021 2:26 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு