/* */

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல பொறியாளர்கள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை
X

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் நகர்நல பொறியாளர்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் மாநகராட்சி பகுதிகளில் செய்யப்படக் கூடிய புதிய பைப்லைன் அமைத்தல். புதிய கட்டிடங்களுக்கு வரைபடம் வழங்குதல். உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டெண்டர் கொடுப்பது மற்றும் முடிந்த வேலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று பொறியாளர்கள் பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

மேலும் பொறியாளர்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு காரில் இருந்த ஆவணங்களை போலீசாரால் எடுத்துச்செல்லப்பட்டது.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பொறியாளர் பிரிவு உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை காரணமாக மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Updated On: 3 Aug 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது