திண்டுக்கல்லில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று தீவிரமடைந்து இதனையடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் தொற்று தீவிரம் குறைந்ததையடுத்து.
தமிழக அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வருகிறது இதன் ஒரு கட்டமாக வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலில் உள்ள தூண்கள் மற்றும் தரைகள் ஆகியவற்றை தண்ணீர் அடித்து ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர் மேலும் கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் பெயிண்டால் வட்டங்கள் போடப்பட்டுள்ளது மேலும் ஆங்காங்கே முக கவசம் அணியுங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டுள்ளது 5-ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதேபோல் அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோயிலுக்கும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.