தர்மபுரி கோட்டை கோவிலில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தூய்மைப் பணி
தர்மபுரி கோட்டை கோவிலில் பெரியார் பல்கலைகழக நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெறும் தூய்மைப் பணியை எம்எலஏ தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
மத்தியஅரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா மற்றும் தர்மபுரி பெரியார் பல்கலைகழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து தூய்மைஇந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது.
இந்த தூய்மை பணியை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். பெரியார் பல்கலை முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் கோவில் வளாகத்தில் இருந்த குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் இம் மாதம் முதல் தேதியிலிருந்து 31ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மைய இயக்குனர் மோகனசுந்தரம் .நேரு யுவகேந்திரா வேல்முருகன், ஆங்கில துறை பேராசிரியரும், நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான முனைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்