Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் தொலைந்த செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,
தர்மபுரியில் மீட்கப்பட்ட செல்போன்களை எஸ்.பி., கலைச்செல்வன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவு மூலமாக கடந்த 15ம் தேதி முதல் செல்போன்களை தொலைத்தவர்களின் புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட 65 மொபைல் போன்களை உரியவரிடம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் வழங்கினார்.
உடன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை குணசேகரன் மற்றும் புஸ்பராஜா மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பழகன் உடனிருந்தனர்.