Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் அரசு மருத்துவமணை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்
ரத்த பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்
HIGHLIGHTS
தர்மபுரியில் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்
தர்மபுரி அடுத்த கொல்ல பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்( 56 ) . இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியாற்றி வந்தார். இன்று காலை 6 மணி அளவில் ரத்தப் பரிசோதனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் . அங்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரமேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்