/* */

அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அகவிலைப்படி நிலுவைத் தொகையை  வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்.

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி தலைமைதாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் விஜயன் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலச் செயலாளர் குப்புசாமி ,தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் பெருமாள் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர்.

இதில் 1. 1. 2020 முதல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலைப்படி 11 சதவீதம் உடனடியாக தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனோவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் செலவுத் தொகையை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும்.

மாவட்ட அளவிலான கமிட்டி உத்தரவிட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்காமல் திருப்பி அனுப்புகின்ற போக்கை கண்டிப்பதுடன், முழு செலவு தொகையும் வழங்க உத்தரவிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.

Updated On: 8 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!