இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில் மக்கள்
கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி இரண்டாவது நாளாக செங்கல்பட்டு நகர மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக செங்கல்பட்டு நகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வரதராசனார் வீதி வேதாசலம் நகர் ராட்டின கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இராட்டினகிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை செல்ல கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வருடாந்திர தோறும் சிறு மழைக்கே செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரி இல்லாத காரணமாக மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே வடிகால்களை உடனடியாக தூர்வாரி வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.