Begin typing your search above and press return to search.
ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்ச்சாலையில் இன்று சாலை விபத்துக்களை தடுப்பது, பாதுகாப்பான சாலை போக்குவரத்து மற்றும் மதுபோதையில் ஏற்படும் விபத்து குறித்தும், அதன் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
மேலும் 40 கனரக வாகனங்களுக்கு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் (Reflector Stickers) காவல் துறையின் சார்பாக ஓட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிமெண்ட் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.