அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட பொதுமக்கள் குறை தீர் கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 09.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி முதல் கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் பொட்டவெளி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் இருகையூர் கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் ஆனந்தவாடி கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஓலையூர் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
அரியலூர் வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளாரும், உடையார்பாளையம் வட்டத்திற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரும், செந்துறை வட்டத்திற்கு பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், ஆண்டிமடம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள்.
எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக்கடைகள் தொடர்பான மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.