/* */

சாலைகளில் விவசாய பொருட்களை உலர வைத்தால் கடும் நடவடிக்கை

சாலைகளில் விவசாயபொருட்களை உலர வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

சாலைகளில் விவசாய பொருட்களை உலர வைத்தால் கடும் நடவடிக்கை
X

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பு: இன்று, 23.12.2021 தா.பழூர் அருகே விவசாய விளைபொருட்களை சாலையில் உலர வைத்ததால், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் அபாயகரமாக விளைபொருட்களை சாலையில் கொட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த குற்றத்திற்காக, கோடங்குடியைச் சேர்ந்த ரவி (40) என்பவரை, தா.பழூர் காவல்துறையினர்கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் பிரதான சாலைகள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகளில் மக்கள் விவசாய விளைபொருட்களை சாலையில் காய வைப்பதால் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் குவித்து வைப்பதாலும் அலட்சிய செயல்களாலும் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. விளைபொருட்களை சாலையில் காய வைப்பது குற்றமாகும். இவ்வாறு சாலைகளில் விளை பொருட்களை காய வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Updated On: 23 Dec 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  10. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!