பெட்ரோல் டீசல் விலை உயர்வு: தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
அரியலூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளிகள் சங்க சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில அரசு வாட் வரியில் வரி குறைப்பு செய்யவில்லை என கூறி தி.மு.க. அரசுக்கு எதிராக சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி பங்கேற்றனர்.
பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாய், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்துள்ளது. மாநில அரசு 41 ரூபாய் வரி வாங்கும் நிலையில் ஒரு ரூபாய் கூட பொதுமக்களுக்காக வரி குறைப்பு செய்யவில்லை. ஆனால் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் ஆளும் இருபத்தி மூன்று மாநிலங்களில் மத்திய அரசும், மாநில அரசும் வரி குறைப்பு செய்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசு மத்திய அரசை குறை சொல்லி வரி குறைப்பும் செய்யவில்லை.
மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு நிதியில் அனைத்து வேலைகளும் செய்து வருகின்றனர் என குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.