ஜெயங்கொண்டம் அருகே கண்ணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்த சாலை மேம்பாட்டு பணி
ரூ. 642.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி ஊராட்சி, நெடுஞ்சாலைத்துறை-நபார்டு - கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் அன்னகாரன்பேட்டை முதல் சோழன்மாதேவி வரை கி.மீ 0/0 - 4/085 வரையிலான சாலை ரூபாய் 642.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணியினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் பெ.வடிவேல், உதவி கோட்டப் பொறியாளர் வீ.பூ.சரவணன், உதவி பொறியாளர் க.பிரியதர்ஷினி,ஒன்றியக்குழு உறுப்பினர் முனைவர் முருகானந்தம்,ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை , ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் சூசைராஜ்,த.நாகராஜன், எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ரவி ,கலியன், பிரதிநிதிகள் ரமேஷ் , சம்பந்தம்,ஒப்பந்ததாரர் ஜனார்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.