Begin typing your search above and press return to search.
செந்துறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
செந்துறை அருகேயுள்ள கோட்டைக்காடு பகுதியில் தளவாய் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளாற்று பாலத்தின் அடியில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(23), ஜோதிபாஸ்(23), பாஸ்கர்(19) என்பதும், 3 பேரும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம இருந்து 1.200 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.