Begin typing your search above and press return to search.
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் கிராமத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி திருமானூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கோவிலூர் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு 4 பேர் கொண்ட கும்பல் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 3 டிராக்டர்களில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த 4 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட சபரிவாசன், ராஜதுரை, அன்பழகன், ரவிசந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.