/* */

ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
X

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 காவல்நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த 26ம்தேதி அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் மற்றும் மீன்சுருட்டி ஆகிய இடங்களில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மீன்சுருட்டி மற்றும் கீழப்பழுவூர் விஏஓ.,கள் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழப்பழுவூர்,மீன்சுருட்டி ஆகிய 2 காவல் நிலையங்களிலும் ஆ.ராசா மீது இந்திய தண்டனைச்சட்டம் 153, 294(பி) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 127(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!