தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர்
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு, குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து, அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு பெற, 1386 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, 05.07.2021 முதல் 03.08.2021 வரை, பள்ளிக்கல்வித் துறையின் rte.tnschools.gov.in என்ற இணைய வழியாக, குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
25 சதவீத இடஒதுக்கீட்டு சேர்க்கைக்கான இடங்கள் குறித்த எண்ணிக்கை, பள்ளி விளம்பரப்பலகையில் 20.07.2021 அன்றும், இணையவழி 25 சதவீத இடஒதுக்கீட்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பள்ளி விளம்பரப் பலகையில் 03.07.2021 அன்றும், தகுதியான விண்ணப்பங்கள் குழந்தைகளின் பெயர் பட்டியல் மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் அதற்குரிய காரணத்துடன் 09.08.2021 பிற்பகல் 05.00 மணி வரையிலும் பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும்.
மேலும், இணையவழி சேர்க்கை கோரி விண்ணப்பங்கள் 05.07.2021 முதல் 03.08.2021 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கல் அடிப்படையில் 10.08.2021 அன்று தேர்வு செய்யப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.