வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
திருவண்ணாமலையில் வீட்டுமனை தகராறில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை பேகோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமாக தச்சம்பட்டு அருகில் உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் வீட்டுமனை உள்ளது.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சவுந்தர்ராஜன் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.
கடந்த 6.5.2015 அன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் சவுந்தர்ராஜன், அவரது தாய் லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கவியரசன் தீர்ப்பு வழங்கினார். இதில் சவுந்தர்ராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் சவுந்தர்ராஜனின் தாய் லட்சுமியை விடுதலை செய்தார்.