/* */

வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

திருவண்ணாமலையில் வீட்டுமனை தகராறில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

திருவண்ணாமலை பேகோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமாக தச்சம்பட்டு அருகில் உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் வீட்டுமனை உள்ளது.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சவுந்தர்ராஜன் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

கடந்த 6.5.2015 அன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் சவுந்தர்ராஜன், அவரது தாய் லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கவியரசன் தீர்ப்பு வழங்கினார். இதில் சவுந்தர்ராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சவுந்தர்ராஜனின் தாய் லட்சுமியை விடுதலை செய்தார்.

Updated On: 27 Jan 2022 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...