/* */

வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்

வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்

HIGHLIGHTS

வேங்கிக்கால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம்
X

உபரி நீர் வெளியேறியதால் சாலையில் தேங்கியுள்ள நீர்

திருவண்ணாமலையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நிரம்பி இருந்த நிலையில் மீண்டும் இன்று காலை பெய்த கனமழை காரணமாக உபரி நீர் அதிகளவு வெளியேறியது.

இதனால் திருவண்ணாமலை வேலூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சேரியன்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றதால் அந்த ஏரியில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேறியது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி வெள்ளத்தை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

Updated On: 23 Oct 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்