திருவண்ணாமலை நகர வளர்ச்சி கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை நகர வளர்ச்சி கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகர வளர்ச்சிக் கூட்டம், பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசு உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை வியாபார பெருமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திருவண்ணாமலையில் வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை தெரிவித்தனர்.
பிறகு பேசிய அமைச்சர், ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு என்று பல பெருமைகள் உண்டு. அண்ணார்ந்து பார்ப்பது என்பது விண்ணை பார்ப்பது. இதில் அண்ணாவின் பெயர் இருக்கிறது. அண்ணார்ந்து பார்க்கும் கூம்பு வடிவத்தில் பெரிய மலையாக திகழ்வதால் அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது, அதில் திரு சேர்க்கப்பட்டு திருவண்ணாமலை என்று பேசப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகர வளர்ச்சிக்காக பலர் தங்கள் கருத்துக்களை இங்கு தெரிவித்துள்ளீர்கள். நகர மையப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்தல், கூடுதல் மின்சார எரிவாயு தகன மேடை அமைத்தல், நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்துதல், அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு புதுப்பித்தல், போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை, நான்கு மாட வீதிகள் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம், கலையரங்கம், வியாபாரிகள் தங்கள் பொருட்களை பதப்படுத்த குளிர் பதனிடும் கிடங்கு, அமைத்து தரப்படும். மேலும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள் வசதிக்காக 4 பேட்டரி கார்கள் இயக்கப்படும். திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்காக உங்களுடைய கருத்துக்களை அவ்வபோது எனக்கு தெரிவியுங்கள், உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மாவட்ட வளர்ச்சிக் காக நான் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தார்.
பின்பு திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ரெட் கிராஸ் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு முகாமில் பார்வையிட்டார்