/* */

சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை

HIGHLIGHTS

சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை
X

திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் குறிப்பாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 26.04.2021 (திங்கட்கிழமை) 27.04.2021 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 21 April 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா