சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை
HIGHLIGHTS
திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் குறிப்பாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 26.04.2021 (திங்கட்கிழமை) 27.04.2021 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.