திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாஸ் கிளினிங்
அண்ணாமலையார் கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் திருவண்ணாமலை தூய்மை அருணை இணைந்து சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு (மாஸ் கிளினிக்) மலை சுற்றும் பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், தூய்மை அருணை துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் , முன்னிலை வகித்தனர்.
இதில் 1,220 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கிரிவலப்பாதை நகராட்சி மற்றும் ஊராட்சியில் வருவதால் நகராட்சியில் 6 குழுக்களும், ஊராட்சிகள் சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர், இதில் தூய்மை அருணை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பல்வேறு கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த பணி 10-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
இந்த தூய்மைப் பணி அண்ணாமலையார் கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிறைவாக பேருந்து நிலையம் அருகில் நிறைவுபெற்றது. இந்த தூய்மைப் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், இணை இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் , தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், அரசு உயரதிகாரிகள் ,அரசு அலுவலர்கள் ,நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
துப்புரவுப் பணி முடிந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார், மாநில தடகள சங்கத்தின் துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன் , அரசு உயரதிகாரிகள் அரசு அலுவலர்கள் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் ஒன்றாக அமர்ந்து கிரிவலப்பாதையில் உணவு அருந்தினர்.