Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்று கொண்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவரை முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அருள் செல்வம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.