/* */

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த போந்தை ஊராட்சியில் குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு குற்றங்களை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் வீட்டின் முன்பக்கம், பின்பக்கம் கதவுகளுக்கு விலை உயர்ந்த பூட்டு பயன்படுத்த வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பூட்டப்பட்ட வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை வைக்காமல் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது பக்கத்து வீடுகளில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் முன்பக்கம், பின்பக்கம் மின்சார விளக்குகளை எரியவிட வேண்டும். வீட்டின் முன்பும், பின்புறமும் செடிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருட்டை தடுக்க எச்சரிக்கை மணியினை பொருத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட ஆலோசனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜசேகரன், துணைத்தலைவர் சிவகாமி ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Jun 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்