Begin typing your search above and press return to search.
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் வருகிற 1-ந்தேதி முதல் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட ஆட்சியர்ரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது.