Begin typing your search above and press return to search.
பிளஸ் 2 ரிசல்ட்; திருவண்ணாமலை மாவட்டம் 100% தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 28205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 28205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 244 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் 151 ஆகும்.
அரசு அறிவிப்பின்படி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுகள் இல்லாத நிலையில் மாவட்டத்தில் 100 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.