/* */

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனமிக்கப்பட்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்
X

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளர் முருகேசன் , 

கிருஷ்ணகிரி நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வரும் முருகேசன் திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பார்த்தசாரதி கடந்த அக்டோபர் மாதம் முதல் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக இருந்து வந்தார். நகராட்சி ஆணையாளராக இருந்த பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட பின் திருவண்ணாமலை நகர மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள திருவண்ணாமலை நகராட்சிக்கான முகநூல் பக்கத்தினை துவக்கி அதன் மூலம் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். முகநூல் வாட்ஸ்அப் மூலமும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவ்வப்போது குறைகளை நிவர்த்தி செய்தார்.

அதிலும் குறிப்பாக சித்ரா பவுர்ணமி முடிந்த உடன் நகராட்சி துப்புரவு ஊழியர்களைக் கொண்டு கிரிவலப்பாதை முழுவதும் உடனடியாக சுத்தம் செய்தது, அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்தது என பொதுமக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றிருந்தார். இந்நிலையில் திடீரென்று பார்த்தசாரதி, ராஜபாளையம் நகராட்சிக்கு ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக இருந்த முருகேசன் , திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஆரணி வந்தவாசி நகராட்சிகளில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 May 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்