திருவண்ணாமலையில் வீதி வீதியாக அமைச்சர் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை நகரில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் வேலு வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை நகரில் வீதி வீதியாக சென்று வியாபாரிகள் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அண்ணாமலையார் கோயில் முன்பிருந்து புறப்பட்டு தேரடி தெரு, காந்தி சிலை, சின்ன கடை தெரு, துர்க்கை அம்மன் கோவில் தெரு, ரவுண்டானா, புது தெரு, மத்திய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா வரை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மேளதாளங்கள் முழங்க கைத்தறி ஆடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அமைச்சர் வேலுவை வரவேற்றனர். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்த அமைச்சரை வரவேற்றனர்.
பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு ,வாக்குகளை சேகரித்தார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், கலை இலக்கியப் பிரிவு பேரவை அமைப்பாளர் நேரு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் வெற்றி செல்வன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் நியூட்டன், மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் அருள், யாதவ மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர்கள், கூட்டணி இயக்க நிர்வாகிகள், திமுக தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.