Begin typing your search above and press return to search.
மத்திய அரசை கண்டித்து நகை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டம்
மத்திய அரசின் புதிய ஹால் மார்க் விதியை கண்டித்து திருவண்ணாமலை நகை வியாபாரிகள் கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம்
HIGHLIGHTS
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தேங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள தங்க நகை வணிகம் புதிய விதியால் மேலும் பாதிப்பை சந்திக்க கூடும் என கூறி இன்று 11:30 மணி வரை நகைக் கடைகள் மூடப்படும் என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருவண்ணாமலையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.