/* */

திருவண்ணாமலையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் துவக்கி வைப்பு

திருவண்ணாமலையில் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் துவக்கி வைப்பு
X

திருவண்ணாமலையில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம், நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்,

காசநோய் இல்லா தமிழகம் - 2025' என்னும் இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10 கோடியே 65 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்-ரே பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தமிழக முதல்- அமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என வழங்கப்பட்ட இந்த வாகனம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று காசநோய் உள்ளவர்களை கண்டறிய மக்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்-ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும்.

மேலும் காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், ரூ.500 உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்-ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என 2 அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளை ஒளிபரப்புவதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரேக்கள் எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் காசநோய் கண்டறிய திட்டமிடப்பட்டு உள்ளது. காசநோயாளிகள் குணமடைய சிகிச்சை காலத்தில் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். காசநோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தில் தானியம், திணை மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தன்னார்வலர்களால் வழங்கப்படுகிறது.

சிறப்பாக செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 20 விழுக்காடு குறைத்ததற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சரால் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற திருவண்ணாமலை மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) பி.அசோக், நலக்கல்வியாளர் சேஷாத்திரி, தனியார் பொது ஒருங்கிணைப்பாளர் குணசீலன், நுண்கதிர்வீச்சாளர் சத்தியமூர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் உதயகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 July 2022 1:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்