Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உதவி ஆட்சியர் பயிற்சி கட்டா ரவிதேஜா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் முருகன், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்களது குறைபாடுகளை தெரிவித்து உரிய தீர்வை நாடினர்.