Begin typing your search above and press return to search.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் பௌர்ணமி
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை அதிகாலை தொடங்குகிறது
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை அதிகாலை தொடங்குகிறது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பௌர்ணமி தொடங்குவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் , தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.